Thursday 2 August 2018

காற்றிலே உருகி


Image result for music in nature


பாடல்  : காற்றிலே  உருகி
இசையமைப்பாளர்:  Francis Raja
வரிகள்: மாறன்

பல்லவி:

காற்றிலே  உருகி
மூங்கிலில் முழுகி
இசையாய்  நான்  மாறவா

மேளத்தை  கொண்டு
தாளத்தை  மொண்டு
செவிவிருந்து  தான்  போடவா

மிளிரும் விண்மீன்கள்  சேர்த்து 
புது  மெட்டு தான்   செய்யலாம்

அதில்  மீசை  கவியின் வரிகளை
தைத்து  கானமாய்  மாற்றலாம்

(காற்றிலே  உருகி மூங்கிலில் முழுகி )

சரணம் 1:
குயிலினத்தை  அழைத்து  தான்
நாம்
போட்டி ஒன்று   நடத்தலாம்

அதில்  வென்ற  வந்த குயிலுக்கே
ஒரு
பாடல் வாய்ப்பை வழங்கலாம்

சோகத்தை இன்றே நீயும்   ஓரம் கட்டு
உன் மனதில் வந்து ஓட்டும் என் பாட்டு

(காற்றிலே  உருகி மூங்கிலில் முழுகி )

சரணம் 2:
இசை இல்லா வாழ்கை தான்  என்னாகுமோ
நீரற்ற பூமிக்கு இணையாகுமோ ..

தாலாட்டி  வளர்த்த என் தாயின் தமிழ் பாட்டு
ஒப்பாரி வரைக்கும்  வருமே அது என்னோடு

அன்பால் அகிலத்தை  கட்டி
திசையெங்கும்
இசையால் 
உணவளிப்போம்

(காற்றிலே  உருகி மூங்கிலில் முழுகி )



No comments:

Post a Comment